search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை மகன் கைது"

    • கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் சுடுகாட்டு பகுதியில் இருந்து போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடினர்.
    • புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து சுடுகாட்டுப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் சுடுகாட்டு பகுதியில் இருந்து போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கீழத்தெருவை சேர்ந்த கோபால் (வயது 47) மற்றும் அவரது மகன் முத்துபிரகாஷ் என்ற படையப்பா (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து சுடுகாட்டுப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் மதுபான போலி லேபில்களை ஒட்டி மிலிட்டரி மது என விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே, கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார்.
    • கலெக்டர் உத்தரவின்பேரில் தந்தை-மகன் இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறையை சேர்ந்தவர் தெய்வேந்திரன்(49). இவரது மகன் வைஷ்ணவ்குமார்(22). இவர்கள் 2 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 9.8.2022-ந்தேதியன்று காஞ்சிபுரத்தில் இருந்து 10 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து அதில் 5 கிலோ கஞ்சாவை தேனியில் உள்ள ஒரு வியாபாரிக்கு கொடுத்துவிட்டு மீதியிருந்த கஞ்சாவுடன் மயிலாடும்பாறைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ்டோங்கரே, கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில் தந்தை-மகன் இருவரும் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×